நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி நாளை பொறுப்பேற்க உள்ளார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி நாளை பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா பதவியேற்பு செய்து வைக்கிறார்.

பிரணாப் முகர்ஜி பதவியேற்பையொட்டி நாடாளுமன்ற வளாகம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவியேற்புக்குப் பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பிரணாப் முகர்ஜி அழைத்துச் செல்லப்படுவார். குதிரைப்படை வீரர்கள் சீருடையில் அணிவகுத்து முன்னே செல்ல பிரணாப் முகர்ஜி மாளிகைக்குள் நுழைவார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்படும். அதன் பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் குடியேறுவார்
Social Plugin