Hot Posts

6/recent/ticker-posts

தோல் கொடுத்து... தோள் கொடுங்கள் !!

ன்னும் ஓரிரு நாட்களில் நம்மையெல்லாம் வந்தடைய உள்ள தியாகத்திருநாளில் அறுக்கப்படும் ஆடு, மாடு, ஒட்டகை உள்ளிட்டவைகளில் தோள்களை நமதூரில் நீண்ட நாட்களாக எந்த வித பொருளாதார ஆதாரமுமின்றி செயல்பட்டு வரும் எத்தீம் கானா மதரசாவிற்கு கொடுத்து உதவ வேண்டும் .

சமூதாயத்தில் இயக்கங்கள் பெருகி ஏற்படும் பிரிவினைகளும் பிரச்சனைகளும்  உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
சமிபத்தில் அதிரையில் இரு சமூதாய இயக்கங்கள் தவறாக விநியோகிக்கப்பட்ட நோட்டிசால் இன்று இருதரப்பாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்து கோர்ட் கேசு என அலைந்து கொண்டுளார்கள்.

இது போன்ற சமுதாய இயக்கங்களை ஆதரிப்பதில் தவிறில்லை அவர்களுக்குள் ஒற்றுமை இன்மையால் நாம் அளிக்கும் கொடைகளை வீண் விரயம் செய்து விட வாய்ப்புகளை நாம் உருவாக்கி கொடுத்துவிட கூடாது .

நமதூரில் செயல்படும் அனாதைகளின் இல்லமான எத்தீம்கானாவிற்கு உங்களால் இயன்ற இந்த நல் உதவியை வழங்கி ஆதரவற்றோரின் துஆ க்களை பெற்று வாழ்வில் ஏற்றம் பெற அன்போடு வேண்டுகிறேன் . 
ஆக்கம் :அபு ஹஃபிலா