Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் நாளை உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி:வெல்லப் போவது யார்?


 அதிரையில் உலக அமைதிக்காக வேண்டி அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 2 ஆம் ஆண்டு நெடுந்தூர ஓட்டப் போட்டி நாளை காலை பேரூந்து நிலையத்திலிருந்து துவங்க உள்ளது.இந்த ஓட்டப் போட்டியில் சுமார் 335 பேர் கலந்து கொள்ள உள்ளனர். உலகத்தில் பல மூலைமுடுக்களிலும் இந்த போட்டியைக் காண அதிகமானோர் ஆர்வத்தோடு எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர்.


நமதூர் ஒற்றுமையை பற்றி அனைவரும் அறிவர். இந்த ஒற்றுமையை வழியுறுத்தியும், ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் சினம் கொண்டு திரியும் விசமிகளின் எண்ணங்களை வேறருக்கவேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த நெடுந்தூர ஒட்டப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த போட்டி செம்மையாக நடைபெற ஒத்துழைப்பதுடன் இந்த போட்டியை உற்சாகத்துடன் நடத்திக்கொண்டிருக்கும் அதிரை ஸ்போர்ட்ஸ கிளப் இளைஞர்களை பாராட்டியும் பலர் தங்கள் ஆதரவுகளை கொடுத்துவருகின்றனர்.
இந்த வருடம் நெடுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற போவது யார் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.