Hot Posts

6/recent/ticker-posts

மக்கள் அரசுடன் இணைந்து ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும்: பிரதீபா பாட்டீல்!!


நல்ல அரசிற்கு ஊழல்தான் எதிரியாக இருக்கும் எனவும், அரசும் மக்களும் இணைந்து ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் எனவும் ஜனாதிபதி பதவியிலிருந்து இன்றுடன் ஓய்வுபெற உள்ள பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
 
இதுபற்றி பேசியுள்ள பிரதீபா, நல்ல அரசுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் ஊழல்தான் எதிரியாக உள்ளது. ஊழல் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். ஊழலை ஒழிப்பதற்காக அரசும் மக்களும் இணைந்து போராடவேண்டும் என்றார்.
 
மேலும் கூட்டணி பிரச்சினைகள் பற்றி பேசிய அவர், தற்போதைய தேர்தல்களில் கூட்டணி ஆட்சிகள்தான் அமைக்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடிவதில்லை. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அவர்களது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்றார்.
 
மேலும், சமூக ஒற்றுமை, நேர்மறையான அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி ஆகியவற்றால்தான் இந்தியாவில் ஜனநாயகம் வெற்றிகரமாக விளங்குகிறது. நாட்டின் அரசியலமைப்பு முழுவதுமாக மதிக்கப்பட வேண்டும் எனவும் பிரதீபா கூறியுள்ளார்.