Hot Posts

6/recent/ticker-posts

படிப்பை ஊக்கப்படுத்துவது போன்று மார்க்க விஷயங்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

 அஸ்ஸலாமு அழைக்கும்.
     அன்பார்ந்த பெற்றோர்களே நாம் மார்க்க விஷயத்தில் மோசமாக இருக்கின்றோம்.
பள்ளிகூடத்திற்கு அழைத்து செல்லும் வேன் வந்துவிட்டால் சாப்பிடாமல் கூட பிள்ளைகளை பள்ளிகூடத்திற்கு அனுப்புகிறோம். ஆனால் பள்ளி(மதரசாவிற்கு) அனுப்ப பெற்றோர்கள் நேரமில்லை என்கிறார்கள். படிப்புகள் அனைத்தும் உலக வாழ்க்கையோடு முடிவடைந்துவிடும். அதன் பிறகு நம்மோடு வரக்கூடியது Msc  டிகிரியோ M Phil  டிகிரியோ வராது. நாம் செய்த மார்க்க சம்பந்தமான நற்  செயல்கள் மட்டுமே நம்மோடு வரும். ஆகையால் நமது பிள்ளைகளை மதரசாவிற்கு அனுப்பி ஆலிம்கலாகவும்,ஹாபில்கலாகவும் ஆக்குங்கள் . அதற்காக படிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நன்றாக படிக்கவையுங்கள் பட்டதாரிகளாக ஆக்குங்கள். இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று அதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.   அல்லாஹுதால  நம்மை எல்லாம் நல்லோர்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக.       ஆமீன்..