Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினத்தில் தமுமுக மாநில துணைச் செயலாளர் தலைமையில் நடந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டம்:



டெல்லி காவல்துறையில் காவலராக பணிபுரிந்த சஃபியா என்ற  பெண்ணை  கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்த காமக் கொடியவர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இன்று  06/09/2021 திங்கள் கிழமை மாலை 4:30 மணியளவில் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் அருகில் நடைபெற்றது

மேற்கண்ட ஆர்பாட்டத்தை  தமுமுக மாநில துணைச் செயலாளர் எஸ்,அஹமது ஹாஜா தலமையில் அதிராம்பட்டினத்தில் பகுதியில் உள்ள ஆண்,பெண்கள் திரளக  பங்கு பெற்றனர்

 இந்த ஆர்பாட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர்கள்  தாங்கள் அப்துல்காதர், திருச்சி அய்யூப் மற்றும் சகோதரி சவ்தா ஆகியோர்  கண்டன உரையாற்றினார்