Hot Posts

6/recent/ticker-posts

அகல ரயில் பாதையின் பணியினை துரிதப்படுத்த அதிரை நல்வாழ்வு பேரவையின் செயலர் கோரிக்கை மனு!!

அதிரை நகரத்து மக்கள் தொடர் வண்டியில் சென்று கிட்ட தட்ட 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அதிரைக்கு அகல ரயில் பாதை வேண்டி பொது மக்கள் பேரணி நடத்தினர்.அதிரை பேரூராட்சி தலைவர் சகோ.S.H.அஸ்லம் ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார்.இதில் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.பல ஊர்களில் அகல ரயில் பாதை பணி தாமதமாக துவங்கினாலும் விரைவாகவே நிறைவு செய்யப்பட்டு உள்ளது. அதிரைக்கு அகல ரயில் பாதையின் பணியினை துரிதப்படுத்த கோரி அதிரை நல்வாழ்வு பேரவை செயலாளர் A.ஷாகுல் ஹமீது (நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணி) அவர்கள்,
மாண்புமிகு அன்புள்ள ஜனாப் M.A.அப்துல் ரஹ்மான் சாகிப் 
(தமிழ்நாடு நாடாளமன்ற உறுப்பினர்) அவர்களுக்கு வேண்டுகோள் மனுவை எழுதியுள்ளார்.

 அதிரை மக்கள் தொடர் வண்டியில் பயணம் செய்ய ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகல ரயில் பாதை பணியினை விரைவாக சரி செய்து அதிரை மக்களின் ஏக்கத்தை தனிப்பார்களா?