Hot Posts

6/recent/ticker-posts

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2 ஆம் தேதி துவக்கம்!!


பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. 8.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வர்களின் பெயர் பட்டியல் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 


தற்போது, பட்டியலில் விவரங்களை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கான செய்முறை தேர்வு வரும் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கும் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. 


பிப்ரவரி 23ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்கள் தங்கள் வசதிக்கேற்ப கால அட்டவணை தயாரித்துக் கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.