Hot Posts

6/recent/ticker-posts

ஒருவனே இறைவன்!!



அல்லாஹ் ஆற்றல்களை, அவன் மறையின் வழி நின்று அகிலத்துக்கும் எடுத்துரைத்தார் நமது உயிரினும் மேலான அண்ணல் நபிகள் நாயகம்.,

கடுகினும் சிறிய வித்தாலே,கானகத்தை உருவாக்கினான் ஆரஞ்சையும் ஆப்பிளையும், ஒர் மண்ணில் பயிராக்கினான்.,

அரசும் அத்தியும் ஓரிடத்தில்,வித்துக்கள் விழுவது ஓர் மண்ணில் கிளைவிட்டு வளர்வது வேறுருவில்.,

வாழும் மக்கள் பல கோடி, சென்றவர்கள் கோடானு கோடி,
உருவங்கள் அத்தனையும் வேறு வேறு, ஒன்றுக்கொன்று மாறுபாடு.,

கண்முன்னே காண்பதெல்லாம் அவன் படைப்பு,
பகுத்தறிந்து பார்க்கும்போது பெரும் வியப்பு.,

கருங்கல்லில் செதுக்கினாலும்,சிற்பம் கூட சில நூறு ஆண்டுகளில் சிதிலமாகி போவதுண்டு.,

ஒளி கொடுக்கும் சூரியனும்,
பல கோடி ஆண்டுகளின் பலனின்றி போய்விடுமாம்.,

பூமியும் ஓர் நாளில் வெடித்து சிதறி  வெண்சாம்பலாய் மாறிவிடும்.,

அத்தனையும் அவன் படைப்பு,
அவை அனைத்துமே அவனுள் அடக்கம்.,

ஆக்கவும் அழிக்கவும் அவனால் முடியும்,
அழியாத ஒரு பொருள் அவனின்றி வேறில்லை..!!

அவன் ஒருவனே இறைவன்!!


            ஆக்கம்,
     புதூர் அஜீஸ்கான்.