அதிரை பிரெண்ட்ஸ் கால் பந்துக் கழகம் கடந்த 2 வார காலமாக 9 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டியினை நடத்தி வருகிறது.இந்த ஹொடர் போட்டியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துக் கொண்டன.
நேற்று நடந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் VVFC மனச்சை அணியும் நேதாஜி FC தஞ்சாவூர் அணியும் மோதின.இந்த பரபரப்பான போட்டியில் நடப்பு சாம்பியனான தஞ்சாவூர் 2-0 என கோல் கணக்கில் வென்று தொடர்ந்து 3 வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இன்று இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் சவன் ஸ்டார் சென்னை அணியும் அதிரை (AFFA) அணியும் மோதின.இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்தப் போட்டியில் சென்னை அணி முதலாவது கோல் அடித்தது.
இதன் பின்னர் இரண்டாவது அரை பகுதி நேர ஆட்டத்தில் போட்டி முடிய 5 நிமிடம் இருக்கையில் (AFFA) அணியின் ஹீரோ அஸ்ரப் 1 கோல் அடித்தார்.
பின்பு ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.பின்பு சென்னை அணியினரை (AFFA) அணியினர் கட்டுக்குள் கொண்டு வந்த போது ஆட்டம் முடிந்தது.இதனால் போட்டி 1-1 என சரி சமனில் முடிந்தது.
ஆட்டம் சரி சமனில் முடிந்ததால் நாளை (28-04-2012) அன்று இந்த போட்டி நடைபெரும்.
நாளைய தினம் நடக்கும் போட்டி அதிரை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
Social Plugin