ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் ஆதாயம் பெறது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் நிதி ஆலோசகர்கள் மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஷெட்டியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் கலைஞர் டி.வி.க்காக பண பரிமாற்றம் நடந்தது என்பது புகார். இது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு கனிமொழி மற்றும் சரத்குமார் ஷெட்டிக்கு அமலாக்கப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து சரத்குமார் ஷெட்டி அமலாக்கப் பிரிவில் நேற்று ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது நிதி ஆலோசகர்கள் ஆஜராகியிருந்தனர். அவர்களிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்கள் தந்த தகவல்களைப் பதிவு செய்து கொண்டனர்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் கலைஞர் டி.வி.க்காக பண பரிமாற்றம் நடந்தது என்பது புகார். இது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு கனிமொழி மற்றும் சரத்குமார் ஷெட்டிக்கு அமலாக்கப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து சரத்குமார் ஷெட்டி அமலாக்கப் பிரிவில் நேற்று ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது நிதி ஆலோசகர்கள் ஆஜராகியிருந்தனர். அவர்களிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்கள் தந்த தகவல்களைப் பதிவு செய்து கொண்டனர்.
Social Plugin