Hot Posts

6/recent/ticker-posts

கருவறையும் இருட்டு, கல்லறையும் இருட்டு, நடுவுல எதுக்கு உனக்கு கரண்ட்டு..கலக்கும் எஸ்.எம்.எஸ்.!


மின்தடை தமிழக மக்களைப் பாடாய்ப்படுத்தி வரும் நிலையில் அந்த மின்தடையை வைத்து ஒரு சூப்பர் எஸ்.எம்.எஸ்.ஸைத் தட்டி விட்டு டென்ஷனில் இருக்கும் மக்களை சிரிக்க வைத்து வருகின்றனர் சிலர். தமிழகத்தில் இன்று இந்த எஸ்.எம்.எஸ்.தான் படு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறதாம்.
டைமிங்காக எஸ்.எம்.எஸ். அனுப்புவதில் நம்மவர்களுக்கு நிகர் நம்மவர்கள்தான். இந்த நிலையில் தற்போது தமிழகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் மின் தடையை மையமாக வைத்து ஒரு சூப்பர் எஸ்.எம்.எஸ். தமிழக செல்போன்களைக் கலகலப்பாக்கி வருகிறது.
அந்த எஸ்.எம்.எஸ்ஸில் சொல்லப்பட்டிருப்பது இதுதான்...
கருவறையும் இருட்டு
கல்லறையும் இருட்டு
நடுவுல உனக்கு எதுக்கு கரண்ட்டு?
பில்லை மட்டும் கரெக்டா கட்டு..
இப்படி தமிழ்நாடு மின்வாரியம்

இப்படிப் போகிறது இந்த கலகலப்பு எஸ்.எம்.எஸ். தமிழகம் முழுவதும் இந்த எஸ்.எம்.எஸ். மின்சாரம் போல படு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறதாம்.
இன்னும் என்னென்ன எஸ்.எம்.எஸ்.எல்லாம் வரப் போகுதோ....அதுக்குள்ள கரண்ட்டை சரியாக்கிடுங்கப்பா..!