Hot Posts

6/recent/ticker-posts

போதை தரும் பொருள்களை மற,மகிழ்ச்சியாய் வாழ்.....

அஸ்ஸலாமு அலைக்கும்..
            
அன்பார்ந்த சகோதரர்களே,பெரியோர்களே,வாலிபர்களே,வளர்ந்து வரும் இந்த நாகரீக உலகில் ஏராளமான நோய்களும் வேகமான முறையில் பரவி வருகிறது.

இதற்க்கெல்லாம் காரணம் போதை தரும் பொருள்களை உபயோகிப்பதன் காரணமே.தற்பொழுது அந்த போதை வஸ்துக்களை சிறியவர்களும் உபயோகப்படுத்தி வருகின்றனர்..இது வேதனை தரும் விஷயமாக உள்ளது.

இவர்கள் இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களுக்கு அவர்களது பெற்றோர்களே காரணம்..என்னென்றால் தங்கள் பிள்ளைகளை சரியான முறையில் கவனித்து கொல்லாத காரணத்தினாலும்,அந்த பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஆதரவாக பேசுவதினாலும்,அவர்கள் இருக்குமிடத்தில் போதை பொருள்களான சாராயம்,சிகரெட்,போதை தரும் பாக்கு,போன்றவைகளை அவர்களிடம் பணம் கொடுத்து வாங்கி  தரும்படியும் அவர்கள் முன்னிலையில் அதை உபயோகப்படுத்துவதும் தான் முதல் காரணம்..

அப்படி உபயோகப்படுத்தும் பொழுது அந்த பிள்ளைகள் நம்ம அப்பா,வாப்பாவே உபயோகப்படுத்துகிறார்கள் நாம் உபயோகப்படுத்தினால் என்ன தவறு என்று நினைக்கும்..
அன்பானவர்களே,சற்று சிந்தித்து பாருங்கள்  போதை தரும் பொருள்களை உபயோகப்படுத்துவதன் மூலம் நமக்கு என்ன லாபம்..?

சிந்திக்கும் ஆற்றலை நமக்கு (அல்லாஹ்) தந்து இருக்கின்றான்..
சிந்தித்து முடிவெடுங்கள்.இதனை நாம் பயன்படுத்துவதால் நமது உடல் தான் கெட்டுவிடுகின்றது.இதனை கொண்டு ஒரு பயனும் இல்லை நமக்கு..

பெரியோர்களும் சரி,நடுத்தர வயதினரும் சரி,வாலிபர்களும் சரி, அழிவு தரும் போதை பொருள்களை மறந்துவிடுங்கள்,மகிழ்ச்சியாய் வாழுங்கள்..
இதனை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும்..