Hot Posts

6/recent/ticker-posts

குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுங்கள்..

           அஸ்ஸலாமு அலைக்கும்...
    அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே அதிரை நகரில் எதற்குமே பஞ்சம் கிடையாது. ஆனால் மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளை நல்வழிபடுத்த பள்ளிக்கூடம் இல்லை. சிலர் இது போன்ற குழந்தைகளை தெருக்களில் கண்டால் முகத்தை சுளித்து கொண்டு போய்விடுகிறார்கள். அப்படி அவர்கள் முகத்தை சுளித்து கொண்டு செல்லும் பொழுது அந்த குழந்தையை பெற்ற தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்...
அப்படி முகத்தை சுளித்து கொண்டு செல்லும் அவர்களுக்கே அதே போன்று குழந்தையை அல்லாஹ்  கொடுத்தால் என்ன செய்வார்கள்.அல்லாஹ் நாடினால் யாராலும் தடுக்க முடியாது.
  அந்த குழந்தைகளை நல்வழி படுத்த அதிரையில் கண்டிப்பாக ஒரு பள்ளிக்கூடம் வேண்டும். அந்த குழந்தைகளுக்காக அதிரை நகரத்தில் படித்த பெரியோர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்கள் நினைத்தால் அதிரையில் இது போன்ற குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டி தர இயலும். இது போன்ற குழந்தைகளுக்கு நேர்மையான முறையில் அல்லாஹுடைய பொருத்தத்தை மட்டுமே நாடி ஒரு பள்ளிக்கூடம் கட்டி தர வெளிநாட்டு வாழ் சகோதரர்களும் முன்வாருங்கள். சிலர் இந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் நடத்துகிறோம் என்ற பெயரில் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் பணத்தை பிடிங்கி கொண்டு இருகிறார்கள். இதனை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான். மூளைவளர்ச்சியற்ற குழந்தைகளுக்கு நிச்சயம் அதிரை நகரில் பள்ளிக்கூடம் வேண்டும்.
அந்த பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து உதவ முன்வாருப்கள்....
அல்லாஹ் இதன் மூலம் உங்களுக்கு சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக.....
      ஆமீன்....
எதிர்பார்ப்புடன் 
S. வாஹாப் ,
அதிரைகுரல்.