Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் கீழத் தெருவில் தீ..

அதிரை கீழத் தெருவில் இன்று சரியாக 2.30 மணியளவில் 2 கூரை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் மின் கசிவால் ஏற்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.அந்த கூரை வீட்டிற்கு அருகில் மின் கம்பம் இருப்பது குறிப்பிடத்தக்கது.கொழுந்து விட்டு எறிந்த தீயை அப்பகுதி பொது மக்களும், இளைஞர்களும் நீண்ட போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.தீயில் கருகி ஒரு ஆடு இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.தீயினால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளன.தீயை அனைத்த பிறகு தீயணைப்பு வண்டி வந்ததால் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதோ சில புகைப்படங்கள்;



வீட்டில் உள்ள துணிகள் தீயில் கருகி கிடக்கிறது.

புகைப்படங்கள்; M.இத்ரீஸ் அஹ்மத்.