Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் அழிந்து வரும் சுகாதாரம்!!!

 அதிரையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அதிரையில் சுகாதாரம் சீர்கெட்டு வருகிறது.புதுமனைத்தெரு,புதுத் தெரு,தரகர் தெரு,மெய்ன் ரோடு,
C.M.P Lane போன்ற
இடங்களில் ரோட்டோரத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் கொசு தொல்லையும் அதிகமாகி வருகிறது.
தெருவோரங்களில் குப்பைகளும் நிறைந்து காணப்படுகிறது.சில தெருக்களில் குப்பை தொட்டிகளும் இல்லை.
மழை நன்றாக பெய்துள்ளதால் குப்பை கொட்டும் இடத்தில் சேறும்,சகதியுமாக காட்சியளிக்கிறது.தெருக்களில் சாலைகள் குண்டும்,குழியுமாக காணப்படுகிறது.இதனால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது.
இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இதோ சில புகைப்படங்கள்;




 புகைப்படங்கள்: இத்ரிஸ் அஹ்மத்.