Hot Posts

6/recent/ticker-posts

பெற்றோர்களே!!


இந்தப் பதிவு குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு!

அரசுப் பொதுத் தேர்விற்கு இன்னும் 2 ,3 மாதங்கள் தான் உள்ளது.+2 மாணவர்களுக்கு மார்ச் 8 ஆம் தேதியும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதியும் தேர்வு ஆரம்பமாக உள்ளது.சரியாகப் படிக்காத மாணவர்களும் இந்த தேர்விற்கு பல முயற்சிகளை செய்து படிப்பதற்கு ஆர்வத்துடன் தயாரகுவார்கள்.

இப்படி இருக்கையில் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை படி,இன்னும் தேர்விற்கு 2 மாதம் தான் உள்ளது என்று அறிவுரை என்ற பெயரில் நச்சரிக்க தொடங்கி அவர்களை பயமுறுத்துகின்றனர்.இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொஞ்சமாவது சுதந்திரம் கொடுக்க வேண்டும்.ஏன்? என்றால் அப்பொழுது தான் அவர்களின் தேர்வு பயம் நீங்கி இயல்பான மனநிலை கிடைக்கும்.அவர்களுக்கு தானாகவே படிப்பதற்கு ஆர்வம் வரும். ஆனால் பெற்றோர்கள் இப்படியில்லை!
மாணவர்களுக்கு சிறிது நேரம் கூட சுதந்திரம் அளிப்பதில்லை.
ஒரு மாணவன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி அல்லது செய்திகள் போன்றவற்றை பார்ப்பதற்கும் பெற்றோர்கள் தடை விதிக்கின்றனர்.

பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சோர்வாக வீடு திரும்பும் மாணவர்களை ஒரு 2 மணி நேரம் கூட பெற்றோர்கள் விளையாட அனுமதிப்பது இல்லை.மாறாக வீட்டிற்க்கு வந்ததும் புத்தகத்தை எடுத்து படி என்கின்றனர்.8 மணி நேரம் பள்ளியில் படித்து விட்டு வீட்டிற்கு வந்ததும் மீண்டும் புத்தகத்தை எடுத்துப் படி என்றால் அந்த மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்று நீங்களே நிதானமாக சிந்தியுங்கள்!!

அதற்காக மாணவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க சொல்லவில்லை.அவர்கள் படிக்கும் போது கொஞ்சமாவது அவர்களுக்கு பிடித்த நிலையில் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் பயன்படுத்தும் செல்போன்களையும் பெற்றோர்கள் பிடுங்கி கொள்கின்றனர்.ஏன் என்றால் படிப்பில் ஆர்வம் இருக்காதாம்.மாறாக செல்போனில் தான் ஆர்வம் இருக்குமாம்.இது பெற்றோர்களின் நினைப்பு!
இது உண்மை தான். 
ஆனால் மாணவர்களுக்கு ஒரு 1 மணி நேரமாவது செல்போனே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.(செல்போனில் இண்டர்நெட்) இல்லாத வகையில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

செல்போனை பெற்றோர்கள் பிடுங்கி கொண்டால் என்னதான் செய்தாலும் படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படாது.இந்த 1 மணி நேரம் செல்போன் உபயோகப்படுத்த அனுமதித்தால் தானாகவே மாணவர்களுக்கு படிக்க ஆர்வம் வந்து விடும் என்பதில் சந்தேகமில்லை!!
பெற்றோர்கள் இப்படி கொஞ்சம்,கொஞ்சம் பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி வழிவகை செய்தால் தான் படிப்பில் ஆர்வம் ஏற்படும்.

பெற்றோர்களே! உங்களுடைய பிள்ளைகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்.அதற்க்கு பெற்றோர்களாகிய நீங்கள் ஓரளவாவது உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்தால் (இன்ஷா அல்லாஹ்) வெற்றி நிச்சயம்!!

"இந்தப் பதிவு ஓர் மாணவனின் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது குறிப்படத்தக்கது".  
            ஆக்கம்,
       S.அப்துல் வஹாப்,
               அதிரை.