Hot Posts

6/recent/ticker-posts

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா!!

நமதூர் அதிரையில் பழங்காலமாகசெயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 63 வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.காலை 7.30 மணிக்கு 13 வது வார்டு கவுன்சிலர் அப்துல் காதர் தேசிய கொடி ஏற்றினார்.இந்த விழாவிற்கு அதிரை பேரூராட்சித் தலைவர் சகோ.S .H .அஸ்லம்,காதர் முஹைதீன் பள்ளியின் ஆசிரியர் ஜனாப்.ஹனிபா சார் ,(வக்கீல்) A .அப்துல் முனாப் BA .,BL ., அவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

பள்ளி மாணவர்களுக்கு (வக்கீல்) A .அப்துல் முனாப் அவர்களால் அன்பான அறிவுரை வழங்கபட்டது.இந்த விழாவிற்கு பெற்றோர்களும் ,பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த பள்ளியின் ஆசிரியர் திரு.டேவிஸ் அவர்களின் பெருமுயற்சியால் பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தபட்டன.இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு A.ஜாகிர், A.ஷாகுல் ஹமீது  அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.

 இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையின் சிறப்பான வழி நடத்தளாலும்,பள்ளியின் மற்ற ஆசிரிய,ஆசிரியைகளின் சிறப்பான வழிகாட்டுதலாலும் இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வியை திறம்பட கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்களும்,பொது மக்களும் இந்த பள்ளியின் ,ஆசிரிய,ஆசிரியைகளுக்கும்  என்றென்றும் ஆதரவு தரவேண்டும் என்பதே "அதிரை குரலின்" எதிர்பார்ப்பு.