Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் துணிகரம்:நகைக்கடை பூட்டை உடைத்து ரூ.23 லட்சம் நகை கொள்ளை!!


நமதூர் அதிரை காலேஜ் ரோட்டில் செந்தில் என்பவர் கே.ஆர்.ஆபரண மாளிகை என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார். 
இங்கு சம்பவத்தன்று இரவு, வியாபாரம் முடிந்ததும் கடையை செந்தில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
 
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் முன்பக்க பூட்டு மற்றும் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கடையில் இருந்த நகைகளை பைகளில் அள்ளி போட்டு கொள்ளையடித்து சென்றனர்.  
 
இன்று கடை உரிமையாளர் செந்தில் ஊழியர்களுடன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ஷோகேசில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. அதன் மதிப்பு ரூ.23 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
 
இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலை கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.  
 
கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து ஓடி சற்று தொலைவில் உள்ள மெயின் ரோட்டில் போய் நின்றது. எனவே கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பிச் சென்று இருக்கலாம் என கருதுகின்றனர். நகைக்கடை கொள்ளை சம்பவம் அப்ப குதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.