Hot Posts

6/recent/ticker-posts

புற்று நோயிலிருந்து யுவராஜ்சிங் குணமடைய இலங்கை வீரர்கள் பிரார்த்தனை!!


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன்களில் ஒருவர் யுவராஜ்சிங். உலக கோப்பையை வெல்ல இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கட்டி இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
 
தற்போது அது புற்று நோய் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் அமெரிக்காவில் கீமோ தெரப்பி சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே யுவராஜ் சிங் விரைவில் குணமடைய இலங்கை அணி வீரர்கள் பிரார்த்தனை செய்தனர்.
 
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கேப்டன் ஜெயவர்த்தனே, வீரர்கள் மற்றும் ஊழியர்கள் எங்களது நண்பரான யுவராஜ்சிங் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தோம். அவர் விரைவில் அணிக்கு திரும்பி சக வீரர்களுடன் இணைந்து விளையாட வேண்டும் என்பது எங்களது பிரார்த்தனையாக இருந்தது. விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என்றனர்.