
இந்தக் குற்றச்சட்டு பற்றி இன்று கருத்து கூறிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, ’தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் உலகின் எந்தப் பகுதியில் மீறப்பட்டாலும் அதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது’ என்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தில், தமிழர்கள் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று பிரதமரிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் நாராயணசாமி கூறியுள்ளார்.
இக்கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Social Plugin