Hot Posts

6/recent/ticker-posts

வங்கதேசத்திடம் இலங்கை திணறல் : இந்திய அணியின் இறுதிப் போட்டி கனவு?

11 வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.இந்தப் போட்டியில் ஏற்கனவே பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.இதனையடுத்து இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்  போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இலங்கை அணி வென்றால் மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைக்கும்.மாறாக இலங்கை அணி தோல்வியடைந்தால் வங்காளதேசம் பாகிஸ்தான்  அணியுடன்  இறுதிப் போட்டியில் விளையாடும்.

தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை அணி 232 ரன்களுக்கு  அணைத்து விக்கெட்களையும் இழந்துவிட்டது.233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி தனது இன்னிங்சை விளையாடி  வருகிறது.

இந்தியாவின் இறுதிப் போட்டிக் கனவு பலிக்குமா?