Hot Posts

6/recent/ticker-posts

சங்கரன் கோவில் இடைத் தேர்தல் வெற்றி:சவால் விட்டவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டார்கள்: ஜெயலலிதா!!

சவால் விட்டவர்களுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மகன் திருமணம், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் திருமணம் உள்பட 7 கட்சி பிரமுகர்களின் குடும்ப திருமணங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான்.சங்கரன்கோவில் தொகுதி மக்கள் தொடர்ந்து 6 வது முறையாக அ.தி.மு.கவுக்கு வெற்றி கொடுத்திருக்கிறார்கள். இதற்காக சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


சவால் விட்டவர்களுக்கு சங்கரன்கோவில் தொகுதி மக்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி:  உங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் இந்த தேர்தலில் உங்களுடன் இல்லை. ஆனாலும் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதே?

பதில்:  நீங்களே சொல்லி விட்டீர்கள். நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி:  சட்டசபையிலும் வெளியிலும் உங்களுக்கு சவால் விட்டு சங்கரன்கோவில் தேர்தலில் பார்ப்போம் என்றார்களே. அவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:  அவர்களிடம் நீங்கள்தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் விட்ட சவாலுக்கு சங்கரன்கோவில் தொகுதி மக்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள் என்றார்.