Hot Posts

6/recent/ticker-posts

சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் யுவராஜ்:ரசிகர்கள் வரவேற்பு!!

புற்று நோய்க்கு சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங் நாடு திரும்பினார். 


புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த யுவராஜ் சிங், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து லண்டனில் ஓய்வு எடுத்து வந்த யுவராஜ் சிங் தற்போது நாடு திரும்பியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்றதுடன், இந்தியா உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு மூன்று கட்டமாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து லண்டனில் ஓய்வெடுத்து வந்த அவர், இன்று நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்புவதற்கு முன்பு, யுவராஜ் தனது டுவிட்டர் இணையதளத்தில் பதிந்துள்ள தகவலில், ‘கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. நாளை நான் வீட்டுக்கு செல்கிறேன். இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. நண்பர்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன். தாய்நாட்டில் சந்திப்போம். எனது இந்தியா மகத்தானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.