Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் களைகட்டும் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்!! (காணொளி)


புதுப் பள்ளியில் இரவுத் தொழுகை நடைபெற்றபோது எடுத்த காணொளி.

நமதூர் அதிரையில் இப்பொழுதே ஈகைத் திருநாள் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.நேற்று சவுதியில் ஷவ்வால் பிறை தெரியாத காரணத்தால் 30 நோன்பை முழுமையாக நோற்றனர்.அதே போல நமது ஊர்களிலும் 30 நோன்புகள் வந்திட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

நேற்று அதிரையில் பள்ளிவாசல்கள் எங்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குறிப்பாக செக்கடி பள்ளி, புதுப் பள்ளி,சித்திக் பள்ளி,இஜாபா பள்ளி போன்ற பள்ளிகளில்  (தமாம்)  தராவிஹ் தொழுகையில் குர் ஆன் முடித்து இறைவனிடம் து ஆ செய்து பாவ மன்னிப்பு கேட்கப்பட்டது.

சில பள்ளிவாசல்களில் ஒலிப்பெருக்கி மூலம் புனித குர் ஆன் ஓதப்பட்டு வருகிறது.அதே வேளையில் வெளியூரில் வசிக்கும் அதிரை வாசிகளும் நோன்பு பெருநாளை கொண்டாட ஊருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் அதிரை நகரம் பெருநாள் கொண்டாட்டத்தில் திளைக்கிறது.

பள்ளி வாசல்களில் (தமாம்) குர் ஆன் முடிக்கும் பொழுது புகைப் படங்கள்.

புதுப்பள்ளியில் தொழுகை பொழுது எடுத்தப் படம். 



புகைப்படங்கள் : முஸ்லிம் மலர் ஹசன்.