Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் அரசு மருத்துவ மனையில் இரவு நேர மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்



சுகாதாரதுறை அமைச்சர் மா சுப்ரமணி அவர்களிடம் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா,அண்ணாதுரை கோரிக்கை.

அதிராம்பட்டினம் ஜூன்,26
அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில்  பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர் அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவ வசதிகள் இல்லாததால் மேற்கண்ட பொதுமக்கள் அதிராம்பட்டினத்திற்கு மருத்துவம் பார்க்க வரவேண்டிய சூழ்நிலை உள்ளது ஆகவே அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர்கள் நியமிக்க வேண்டி சுகாதார துறை அமைச்சர் மா சுப்ரமணி அவர்களிடம் கா, அண்ணாதுரை கோரிக்கை வைத்தனர்

அதிராம்பட்டினம் சுற்றியுள்ள கிராமங்களில் தனியார் மருத்துமனை இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையை நம்பி கிராம மக்கள் உள்ளனர் அதிராம்பட்டினத்தில் ECR சாலை உள்ளதால் அதிகமான விபத்துக்கள் இரவு நேரங்களில் ஏற்படுவதால் மேற்கண்ட மருத்துவ மனையில் இரவு நேர மருத்துவர்கள் நியமிக்க வேண்டி கோரிக்கை மனு அளித்தனர் அப்போது அதிராம்பட்டினம் பேருராட்சி முன்னால் சேர்மன் எஸ்,ஹெச், அஸ்லம் இருந்தனர்