Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் பேரூராட்சியை தனித்துவத்தோடு நகராட்சி யாக மாற்றி தர ஜமாத் சார்பாகமுன்னால் சேர்மன் கோரிக்கை



அதிராம்பட்டினம் செப்,04
அதிராம்பட்டினம் பேரூராட்சியை தரம் உயர்த்தி நகராட்சியாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னால் தலைவர் எஸ்,ஹெச், அஸ்லம் சார்பாக அதிராம்பட்டினம் ஜாமாத் பிரமுகர்கள் நேரில் சென்று( 04/09/2021 ) வாழ்த்து தெரிவித்தனர்

வாழ்த்து தெரிவிக்க சென்ற அதிராம்பட்டினம் ஜமாத்தார்கள் ஒரு கோரிக்கையும் வைத்தார்கள்:

கோரிக்கையில் கூறி இருப்பதாவது
அதிராம்பட்டினம் கடந்த காலங்களில் தனித்துவத்துடன் இருந்து கழகத்தின் கோட்டையாக இருந்து வருகின்றது அதுபோன்று அதிராம்பட்டினம் மக்கள் தொகையை வைத்து சுற்றியுள்ள கிராமங்களை இணைக்காமல் அதிராம்பட்டினத்தை மட்டும் நகராசியாக அறிவித்து கழகத்தின் கோட்டையாக மாற்ற பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் தலமையில் சென்னையில் 4/9/2021 அன்று மாண்புமிகு அமைச்சர் கே,என், நேரு அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது

இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா,அண்ணாதுரை, தொழில் அதிபர் ஹாஜி,எம்,எஸ், தாஜுதீன் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்