Hot Posts

6/recent/ticker-posts

அதிரை முஸ்லீம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக அஸ்பாஃக் நியமனம் !



அதிராம்பட்டினம், செப்,16
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே,ஏ,எம், அபூபக்கர்,மற்றும் மாநில செயலாளர் நிஜாமுதீன், துணைச் செயலாளர் இப்ராஹிமக்கி ஆகியோர் (16/9/2021) வியாழக்கிழமை மாலை அதிராம்பட்டினம் வருகை தந்தனர்

 பின்பு  இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட ஊடக அணியின் பொறுப்பாளர்  ஏ, ஷாகுல் ஹமீது இல்லத்திற்கு சென்று அவரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு,, மறைந்த முன்னாள் மாநில துணைத் தலைவர் மறைந்த SSB  நசுருதீன்,அதிரை அருட்கவி மு,முஹம்மது தாஹா  ஆகியோரின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து துவாச் செய்தனர்

 முன்னதாக அதிராம்பட்டினம் வருகை தந்த மாநில நிர்வாகிகள்  அதிரை நகர முஸ்லிம்லீக் அலுவலகம் சென்று முஸ்லிம்லீக் கொடியை  மாநில பொதுச்செயலாளர் கே,ஏ,எம், அபுபக்கர் ஏற்றிவைத்து   இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாணவர் அமைப்பான MSFன் அதிரை நகர அமைப்பாளராக அஸ்ஃபாக் அகமதுவை நியமனம் செய்து உத்தரவிட்டார்.

இவருக்கு நகர பொறுப்பில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பதோடு, இயக்க வளர்ச்சிக்கும் பாடுபட கேட்டு கொண்டனர்

இந்த நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில செயலாளர் நிஜாமுதீன்,துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் மதுக்கூர  அப்துல் காதர். மாவட்ட செயலாளர் எஸ்,எம், ஜெய்னுல் ஆபிதீன் ,அதிராம்பட்டினம் நகர முஸ்லிம்லீக் பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.

மாணவர் அமைப்பாளராக பொறுப்பு ஏற்று கொண்ட அஸ்பாஃக் கூறுகையில், போதை பழக்க வழக்கத்தால் மாணவர்களின் எதிர்காலம் சீர்கெட்டு கொண்டுள்ளது என்றும், இதனை சட்டரீதியாக தடுக்க MSF இயக்கம் களம் அமைக்கும் என தெரிவித்தார்.

மேலும் இயக்கங்களாய் பிரிந்து கிடக்கும் இளைஞர் சமூகத்தை வலிமைப்படுத்த தாய்ச்சபையாம் முஸ்லீம் லீக்கின் மாணவர் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு சமூதாய பணி செய்திட வேண்டும் எனவும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.