Hot Posts

6/recent/ticker-posts

சென்னை - காரைக்குடி வழித்தடத்தில்தினசரி மீண்டும் கம்பன் எஸ்பிரஸ் இயக்க வேண்டும்.



பொதுமக்கள் கோரிக்கை

அதிராம்பட்டினம்  ஜூலை 04
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் நிறைவுபெற்றும், இன்னும் முன்பு இந்த வழித்தடத்தில் இயக்கிய கம்பன் எக்ஸ்பிரஸ்  ரயில் சேவை தொடங்கவில்லை. இதனால், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதி பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் பலர் தொடர் கோரிக்கை வைத்தும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே முன்பு இயக்கிய கம்பன் எக்ஸ்பிரஸ் காரைக்குடி முதல் சென்னை எக்மோர் வரை இயக்க வேண்டும் என்று முஸ்லிம்லீக்கின் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்களிடம் அதிராம்பட்டினம் சார்பாக கோரிக்கை வைக்கப்படும் 

காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான
 அகல ரெயில்பாதை பணிகள் நிறைவுபெற்று எர்ணாகுளம் முதல் வேலாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மற்று செகந்திராபாத் இராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் , தாம்பரம் செங்கோட்டை சிறப்பு ரயிலும் வாராம் ஓரிரு நாட்க்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

காரைக்குடி முதல் சென்னை எக்மோர் வரை முன்பு இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ்  மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்கவேண்டும் என்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்