Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் ரயில்வே ஸ்டேசனில் டிக்கட் முன்பதிவு கவுண்டர் மற்றும் சென்னை செல்ல எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவேண்டும் .


முஸ்லிம்லீக் கோரிக்கை

அதிராம்பட்டினம்:

மயிலாடுதுறை ~ காரைக்குடி இடையே அகல ரெயில்பாதை பணிக்காக, சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரையில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2006 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அகல ரெயில் பாதை பணி முடிந்து இந்த வழித்தடத்தில் வாராந்திர ரெயிலும், தாம்பரம் செங்கோட்டை  எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றது  மேற்கண்ட இரண்டு எக்ஸ்பிரஸ் ரயிலில் செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும், அதிலும் இந்த ரயில் சரியான நேரத்தில் இயக்கப்படாத காரனத்தால் அதிகமான பயணிகள் மேற்கண்ட ரயில் மூலம் அதிராம்பட்டினம் வருவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

 தாம்பரம் செங்கோட்டை ரயில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாத காரணத்தினால் அதிகமான அதிராம்பட்டினம் பயணிகள் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்து வருகின்றனர்

ரெயில்வே அதிகாரிகள் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேசனில் முன்பதிவு கவுண்டரை ஆய்வு செய்து  அதற்கு ஏற்றாப்போல் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்டரும் சென்னை செல்ல   நடவடிக்கை எடுக்கவேண்டும்

பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேசனில் அதிகமான முன்பதிவு டிக்கட்,  மற்றும் தட்கள் டிக்கட் எடுப்பதற்கு அதிராம்பட்டினம் பயணகள் அதிகம் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது 

எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் ரயில்வே துரை அதிகாரிகள் காரைக்குடி,அல்லது இராமேஸ்வரம் முதல் சென்னை எக்மோர் வரை செல்ல தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவேண்டும் என்றும், முன்பதிவு கவுண்டர் அதிராம்பட்டினத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று அதிராம்பட்டினம் நகர முஸ்லிம்லீக் தலைவர் வழக்கறிஞர் ஏ, முனாஃப் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்