Hot Posts

6/recent/ticker-posts

இது என்ன நியாயம்..!!

    நமதூர் அதிரை வாழ் சகோதர,சகோதரிகளே சற்று சிந்தியுங்கள்.!!
        நமதூரில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டாலும் பெருநாள் அன்று மட்டும் மின் தடை நமதூருக்கு கட்டாயமாக ஏற்படுகிறது.இது நேற்று,இன்று நடப்பது அல்ல.பல வருடங்களாக நடைபெற்று தான் வருகிறது.சில நேரங்களில் மின்சாரத்தை குறைவாக கொடுக்கின்றனர்.இவை அனைத்தும் பெருநாள் நேரத்திலே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இதனால் வீட்டில் உள்ள பெண்கள்,சிறுவர்கள்,வயதானவர்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனை கண்டித்து பல முறை அதிரை மின்சார வாரியத்திடம்  கூறியும் ஒரு பயனும் இல்லை.
இதே போல ஹஜ்ஜு பெருநாளான நேற்றும் இதே மின் தடை நீடித்தது.அதிரை மின்சார வாரியத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் பொது மக்களுக்கு சரியான பதில் அளிப்பதில்லை.இதனால் அதிரை மக்கள் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.  
இதனை அதிரை நகர பேரூராட்சி தலைவர் சகோ.S.H.அஸ்லம் அவர்களிடம் பொது மக்கள் புகார் அளித்ததை அடுத்து விரைவாக சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பேரூராட்சி தலைவர் சகோ.S.H.அஸ்லம் அவர்கள் தனது பணியினை சிறப்பாக செயல்படுத்தி வருவதால் பொது மக்களிடையே மகிழ்ச்சி நிலவி வருகிறது.