Hot Posts

6/recent/ticker-posts

ஆஸ்திரேலியாவில் 4-0 என மண்ணை கவ்வியது இந்திய கிரிக்கெட் அணி:ரசிகர்கள் ஆக்ரோஷம்!!


ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி  வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 4 -௦௦௦ 0 என்ற  கணக்கில் தொடரை பறிகொடுத்துள்ளது.ஏற்கனவே இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலும் இது போன்று முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வியின்  காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அணி வீரர்களை Facebook ,Twitter போன்ற சமூக இணையதளங்களில் தங்களது ஆக்ரோஷ எதிர்ப்பை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.இதே போன்று முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் கேப்டன் தோனியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 100 வது சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்  ரசிகர்களை கடுமையாக ஏமாற்றினார்.

இந்த டெஸ்ட் தொடரில் சச்சின் 73,32,41,80,15,8,25,13 ரன்கள் ஆக மொத்தம் 287 ரன்கள் குவித்திருக்கிறார்.
இந்த தோல்வியையடுத்து கேப்டன் தோனியை கடுமையாக இந்திய கிரிக்கெட் வாரியம் விமர்சித்து உள்ளதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

அடுத்ததாக நடை பெற உள்ள இலங்கை,ஆஸ்திரேலியா,இந்தியா மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரிலாவது இந்திய கிரிக்கெட் அணி நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றி அடையுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு! 
அந்த எதிர்பாப்பை டோனி நிறைவேற்றுவாரா?