Hot Posts

6/recent/ticker-posts

பொருளாதாரத் துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களிடம் கோரிக்கை மனு!!


அதிரை நல்வாழ்வு பேரவை மற்றும் பேரூராட்சி மன்றம் சார்பில் ப.சிதம்பரம் அமைச்சர் அவர்களிடம் அதிரை தொழில் அதிபர் (ஹாஜி) ஜனாப் MST தாஜுதீன் அவர்கள் தலைமையில்,பேரூராட்சி மன்ற பெருந் தலைவர் ஜனாப்.S.H.அஸ்லம் அதிரை முஹம்மது,ஆகியோர் நேரில் சென்று பேரவை சார்பாக திருவாரூர்-காரைக்குடி 147 கி.மீ ரயில் பாதையை அகல ரயில் பாதையாக இந்த நிதி ஆண்டிலேயே செய்து தரும்படி கோரிக்கை மனு கொடுக்க இன்று அதிரை நல்வாழ்வு பேரவை சார்பில் பொருளாதாரத் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்திக்க விரைந்திருக்கிறார்கள்.

கடந்த ஒருமாதத்திற்கு முன்பு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.G.K.வாசன் அவர்களையும் இந்த நல்வாழ்வு பேரவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பேரவை சார்பாக அகல ரயில் பாதை வேலைகளை செய்து வரும் ஜனாப்.மு.க.செ.ஜபார் அவர்களுக்கு அயல் நாடுகளில் பணிபுரியும் அதிரை நண்பர்கள் அலைபேசியில் வாழ்த்து தெரிவித்து இந்த நிதியாண்டிலேயே அதிரை ரயில் பணிகள் நடைபெற வாழ்த்து தெரிவித்தனர்.
தகவல் : அதிரை நல்வாழ்வு பேரவை செயலாளர் A .ஷாகுல் ஹமீது.