Hot Posts

6/recent/ticker-posts

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு!!


குடியரசு தின பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, சென்னை பன்னாட்டு, உள்நாட்டு விமான நிலையத்தில் பார்வையாளர்கள் வருவதற்கு வரும் 31ம் தேதி நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப் படுகிறது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் எதிரொலியாக, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில், பஸ் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சென்னை பன்னாட்டு, உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. 


இது, நேற்று முதல் 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, இரண்டு விமான நிலையத்திலும் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 6 மணி முதல் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வரும் 31ம் தேதி நள்ளிரவு வரை இந்த தடை நீடிக்கும்.விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கார் பார்க்கிங், போர்டிகோ பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பயணிகளும் பலகட்ட சோதனைக்கு பிறகே விமானத்தில் ஏற்றப்படுகின்றனர். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான நிலையத்தில் பரப
ரப்பு காணப்படுகிறது.