Hot Posts

6/recent/ticker-posts

பொதுமக்களை அவமதிக்கும் மின்சார வாரியம்!!!

அதிரையில் ஏறத்தாள  3000 குடும்பங்கள் வசிக்கின்றன.இந்த அதிரையில் ஒரு மின்சார வாரியமும் இருக்கிறது!

இங்கு மின்சாரம் தடை செய்யப்பட்டால் விபரம் அறிந்து  கொள்ள  தொலைப்பேசி எண்ணை அழுத்தியவுடம் தானியங்கி குரல் மூலம் இந்த என் தற்பொழுது பிசியாக உள்ளது என திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருக்கும் .காரணம் மின் தடை ஏற்ப்பட்ட உடன் தொலைப்பேசி ரிசிவரை கீழே எடுத்து வைத்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் செல்வந்தர்கள் வீட்டில் பழுது என்று அழைத்தால் அவர்களது வீட்டிற்க்கு பறந்து போகும் மின் வாரிய ஊழியர்கள்  வசதியற்ற  ஏழைகள்  மின்சாரம் பழுது செய்ய அழைத்தால் அவ்வளவு விரைவாக அக்கறைகாட்டி வருவதில்லையாம் . ஏனென்றால் அவங்கள்ட்ட அது (?)கிடைக்காதாம்.

இதனை மின்சார வாரிய நிர்வாகம் உடன் தலையிட்டு இதுபோன்ற குற்றசாட்டுகளுக்கு முற்று புள்ளி வைத்து மாதம் தோறும் மின்கட்டணம் கட்டும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடன் நிவர்த்தி செய்து தர வேண்டியது மின்வாரியத்தின் விதி!