Hot Posts

6/recent/ticker-posts

தேர்வுகள் நெருங்குவதால் சிறப்பு வகுப்புகள் ஆரம்பம்!!

அரசுப் பொதுத் தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஆரம்பமாகி விட்டன.இதே போன்று நமதூர் அதிரையில் உள்ள காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியிலும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தினமும் (காலை 6 மணி முதல் 8 மணி வரை வகுப்புகள் நடத்தப் படுகின்றன.பின்பு மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற இந்த சிறப்பு வகுப்புகள் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.