Hot Posts

6/recent/ticker-posts

SDPI-யின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்!!

SDPI-யின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நேற்று நமதூரில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.பொதுக் கூட்டத்திற்கு முன்பாக SDPI யின் மாநில தலைவர் K .K .S .M .தெஹ்லான் பாகவி அவர்கள் நமதூர் நடுத் தெருவில் உள்ள SDPI யின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து கொடியேற்றினார்.


இதன் பின்பு மாலை 6:45 மணிக்கு பொதுக் கூட்டம் துவங்கியது.அதிரை நகர செயலர் S.முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.Z.முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார்.


இதற்க்கு பின்பு சிறப்புரையாக மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்தீக் அவர்களும்,
மாநில செயலாளர் K.செய்யது இபுராஹீம் அவர்களும்,
மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் சிறப்பான சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்தப் பொதுக் கூட்டத்திற்கு 2000 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுத்துரைக்கப் பட்டது.
  1. திருவாரூர்-காரைக்குடி வரை அகல ரயில் பாதையாக மாற்றி தர வேண்டும்.
  2. காதிர் முஹைதீன் (பெண்கள்) மேல்நிலைப் பள்ளிக்கு தனித் தேர்வு மையம் அமைத்து தர வேண்டும்.
போன்ற நல்ல தீர்மானங்கள் எடுத்துரைக்கப் பட்டது.
இதன் பின்பு பிலால் நகர் கிளைத் தலைவர் S.அஹமது இபுராஹீம் நன்றியுரை ஆற்றினார்.பொதுக் கூட்ட விழா இனிதே நிறைவுற்றது.