Hot Posts

6/recent/ticker-posts

4 மணி நேர மின் வெட்டு எங்கே? புலம்பும் அதிரை மக்கள்!!

சமீபகாலமாக அதிரை மட்டுமல்லாமல் தமிழகத்தில் மின் தடை அதிகமாக நிலவி வருகிறது.தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ஆரம்பித்து விட்ட நிலையில் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் சிரமமுற்று வருகின்றனர்.காரணம் என்னவென்றால் இரவு நேர மின் தடை.

இந்த இரவு நேரத்தில் மின் தடை செய்யப்படுவதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விட்டது.

கல்வியில் மாணவர்கள் ஒளிவிளக்காக திகழ வேண்டும்.ஆனால் அவர்கள் படிப்பதற்கே ஒளி இல்லை!!

தேர்வுகள் நெருங்குவதால் மாணவர்களின் நலன் கருதி 9 மணி நேர மின் தடை 4 மணி நேரமாக மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.ஆனால் இன்று வரை நமதூர் அதிரையில் மின் தடையில் மாற்றம் இல்லை.

இந்த 4 மணி நேர மின் தடை எப்பொழுது வரபோகிறது என நமதூர் மக்கள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என ஒன்றுமே அறியாத பிஞ்சுக் குழந்தைகளும் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் தவிக்கிறது.
இந்த 4 மணி நேர மின் தடையை அதிரைக்கு எப்பொழுது அமல் படுத்தப் போகிறார்களோ?