Hot Posts

6/recent/ticker-posts

உலகம் போற்றும் நல்லாட்சியை தந்து கொண்டு இருக்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வக்ஃப் வாரியத்திற்கு அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களை தேர்வு செய்ய வழிவகை செய்து அங்கேயும் ஒரு விடியலை தருவார்கள் என திடமாக நம்புகிறேன்.

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் ex,mp வக்ஃப் வாரிய தலைவராக தேர்வு?

தமிழ் நாடு அரசு வக்ஃப் வாரியத்திற்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல்  எதிர்வரும் ஜூலை 22ம் தேதி வியாழக்கிழமை சென்னையில் நடைபெற இருக்கிறது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களின் மேலான பரிந்துரையின் அடிப்படையில் தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் அன்பு அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்கள் வக்ஃப் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்

 அப்துல் ரஹ்மான் ex mp  அவர்கள்   வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய டுடே நாளிதழ் தேர்வு செய்யும் வகையில் மிகச்சிறந்த பணிகளை ஆற்றி தமிழகத்திற்கே பெருமை சேர்த்தவர் அப்துர் ரஹ்மான் ex,mp அவர்கள் 

சமய நல்லிணக்க நாயகராக தமிழகம் முழுவதும் பம்பரமாக சுற்றி வரக்கூடியவர் சங்கைமிகு உலமாக்களை கண்ணியப்படுத்தி மகிழ்பவர் இன்ஷா அல்லாஹ் இவர் வக்ஃப் வாரியத்திற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டால் சமுதாயத்தின் உள்ள வக்ஃப் சொத்துக்களை அபகரித்துல்ல பகுதிகளை தீர்க்கக் கூடிய வகையில் இவர்களின் பணிகள் இருக்கும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது