Hot Posts

6/recent/ticker-posts

புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்க வேண்டும்நவாஸ்கனி எம்,பி. கோரிக்கை



 அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்ததையடுத்து,
இன்று சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியரை  திரு. நவாஸ்கனி சந்தித்தார்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இந்துக்களின் புனித ஸ்தலமான ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்க வேண்டி அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர் இன்று (28-8-2021) சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து திரு. நவாஸ்கனி கோரிக்கை வைத்தனர் அப்போது திரு நாவாஸ்கனி பேசியதாவது:

புண்ணிய தீர்த்தங்களில் நீராட அரசு அனுமதி அளிக்காததால் அங்கு பணி செய்துவரும் 425 பணியாளர்களின் குடும்பம் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிப் படையாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொண்டனர்

இதுகுறித்து தமிழக முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றும் திரு நாவாஸ்கனி எம்,பி, கூறினார்