Hot Posts

6/recent/ticker-posts

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதுபோன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் ஒன்றிய அரசு வாபஸ் பெறவேண்டும்இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை


சென்னை:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதுபோன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் ஒன்றிய அரசு வாபஸ் பெறவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்திய  விவசாயிகள் ஓராண்டு காலமாக கடுமையாக எதிர்த்து வந்த ஒன்றிய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான முடிவை பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ளது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த முடிவை அறிவித்து, வரும் நவம்பர் 29 முதல் தொடர உள்ள இந்தியப் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திரும்பப் பெறும் நடவடிக்கைளை ஒன்றிய அரசு மேற்கொள்ளும் என்ற அறிவிப்பும் வெளியிட்டு இருக்கிறார்.

ஒன்றிய அரசின் இந்த முடிவு இந்திய மக்களின் வரவேற்புக்குரியது. மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் மூன்று ஆண்டு காலத்திற்கு நடை முறைப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி செய்யாது என்று ஒன்றிய மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், இந்த உறுதியை 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அனைத்தும் ஏற்கவில்லை. மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் மிகவும் உறுதியாக இருந்து ஓராண்டு காலமாக போராட்டத்தை தொடர்ந்திருக்கிறார்கள்;  பல இழப்புகளை சந்தித்து இருக்கிறார்கள்; பல உயிர் பலிகளையும் தந்திருக்கிறார் கள். அவர்களின் உறுதிமிக்க தொடர் போராட்டத்திற்குரிய வெற்றியாக ஒன்றிய அரசின்  இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

பிடிவாதப் போக்கை கைவிட்டு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் பாராட்டுக்குரியவர் ஆவார்.

இதேபோல் நாடு முழுவதி லும் பெரும் கொந்தளிப்பையும் குமுறலையும் ஏற்படுத்தி அப்பாவிகள் பலர் உயிர் இழக் கவும், அப்பிராணிகள் பலர் காராகிரகத்தில் நாட் களை எண்ணிக் கொண்டிருக் கும்படியாகவும் தூண்டிய ஒன்றிய அரசின் சி.ஏ.ஏ. - இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்ட மும் உடன டியாக திரும் பப்பெற வேண்டிய தாகும்.

வேளண் சட்டங்களை திரும் பப் பெறுவதில் நல்லெண் ணப் பார்வை செலுத்தி பிரதமர், சி.ஏ.ஏ. சட்டத்தை திரும்பப் பெறுவதிலும் அந்த கண்ணோட்டத்துடன் தனது அணுகுமுறையை தெரிவிக்க வேண்டும்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் சட்டத் திருத்தத்தோடு சி.ஏ.ஏ. சட்டத்தையும் திரும்பப் பெறும் சட்டத்தையும் இணைத்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நாட்டு மக்களின் வரவேற்பையும், வாழ்த்தையும் பிரதமர் பெறவேண்டும் என்று வாழ்த்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்