Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினத்தில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக ஆர்பாட்டம்

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு மற்றும் அனைத்து இயக்கங்களின் சார்பாக நேற்று 19/3/2022 வெள்ளிக்கிழமை யன்று அதிராம்பட்டினத்தில் ஹிஜாபிற்கு எதிரான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை அனைத்து  முஹல்லா கூட்டமைப்பு செய்திருந்தது  இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய அழைப்பாளர் ஹுஸைன் மன்பஈ மற்றும்  நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் உடைய தேசிய செயற்குழு உறுப்பினர் சகோதரி ஆஷா அவர்களும் , மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் சகோதரர் முத்துப்பாண்டி அவர்களும் கலந்துகொண்டு தனது கண்டன உரையை பதிவு செய்தார்கள்.

இறுதியாக ஹிஜாபுக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தை கண்டித்தும் இதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ்-பாஜக சங்பரிவார கூட்டங்களை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது  இதில் அனைத்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு  தனது கண்டன கோஷங்கள் எழுப்பினார்