Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்டர் திறக்க வேண்டும்முஸ்லிம்லீக் தஞ்சை தெற்கு மாவட்டம்கோரிக்கை.


 

சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்கவும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த டிக்கெட் முன்பதிவு கூடம் அமைக்கக்  கோரி இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி  25/9/2019  அன்று   மாநில துணை செயலாளர் மர்ஹூம் நசுருதீன் மறைவுக்கு இறங்கள் தெரிவிக்க வருகைதந்த போது  இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  தஞ்சை தெற்கு மாவட்டம்  கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் காரைக்குடி ~ திருவாரூர்  வழியாக சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்கவும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த டிக்கெட் முன்பதிவு கூடம் அமைக்கக் கோரியும் அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கே.நவாஸ் கனி எம்.பி,  காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் விரைவு ரயில் இயக்குதல் பற்றி ரயில்வே துறை அமைச்சகத்தில் பலமுறை தான் வலியுறுத்தி வந்ததாகவும், மீண்டும் இதுகுறித்து, இரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதாவும் தெரிவிததனர்.

இதனிடையே வரும்  ஜூன்மாதம் 4 ம் தேதி எர்ணாகுளம் முதல் வேலாங்கண்ணி வரை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது டிக்கட் முன்பதிவு விசயத்தில் அதிகமான அதிராம்பட்டினம் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு ஆன் லைன் மற்றும் அருகிலுள்ள பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதிகள்  இல்லாத காரணத்தினால்  வயது முதிர்ந்த பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்  ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் ரயில் டிக்கட் முன்பதிவு கவுண்டர் திறக்கவேண்டும் என்று இந்தியயூனியன் முஸ்லிம்லீக்  தஞ்சை தெற்கு மாவட்டம் கோரிக்கை வைத்துள்ளனர்

அப்போது, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச்  தலைவர் மற்றும் செயலாளர் ,அதிராம்பட்டினம் கட்சி நிர்வாகிகள்  உடனிருந்தனர்.