Hot Posts

6/recent/ticker-posts

திருவாரூர்-- காரைக்குடி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு. சென்னை தொழில் அதிபர் ஹாஜி எம்,எஸ், தாஜுதீன் பங்கேர்ப்பு:




ஓம்கார் பவுண்டேஷன் சார்பில் 29.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் மயிலாடுதுறை திருவாரூர் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி அகல ரயில் பாதையில் விரைவில் அனைத்து வகை பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து ரயில்கள் சேவை  விரைவில் துவங்கிட மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தலைநகர் புதுடெல்லி வரை சென்று மாண்புமிகு ரயில்வே அமைச்சர் மதிப்பிற்குரிய ரயில்வே போர்டு சேர்மன் சென்னை ரயில்வே பொது மேலாளர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோரை தொடர்ந்து சந்தித்து கோரிக்கை வைத்து   வரும் இப்பகுதி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி  29/5/22 அன்று நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு ஓம்கார் இயக்குனர் முனைவர் வே. பாலாஜி தலைமை தாங்கினார்  உதவி இயக்குனர் ஜி.முருகேசன் வரவேற்றார்

 அதிராம்பட்டினம் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான ஹாஜி எம் எஸ் தாஜுதீன் அவர்கள்  முயற்சியில் சிறப்பாக ரயில் பயணிகள் சேவையை ஆற்றி வரும் அதிரை நல்வாழ்வு பேரவை மற்றும் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க தலைவர் திரு ஜெயராமன், அஹ்மத் அலி ஜஃபர், அதிராம்பட்டினம் ரயில் ஆர்வலர்  திரு.ஜாப்பர் அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் ஏ.பி.ராஜ்குமார் அதிராம்பட்டினம் தொழிலதிபர்  எம் எஸ் ஷிகாபுதீன் யுனைடெட் பவுண்டேஷன் செயலாளர் திரு அப்துல் ரஜாக் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்க செயலாளர் வ.விவேகானந்தம் ஆகியோருக்கு  பாராட்டு சான்றிதழ் அளித்து பொன்னாடை அணிவித்து பாராட்டு நிகழ்வு நடைபெற்றது

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் திரு எம் ஹரிகுமார் அவர்கள் வருகின்ற 4 .6 .2022 முதல் இந்த தடத்தில் இயங்கவிருக்கும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவு ரயிலின் கால அட்டவணையை வெளியிட்டு ரயில் சேவைகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.