Hot Posts

6/recent/ticker-posts

பட்டுக்கோட்டை தஞ்சை சாலையில் புதிய மருத்துவமனை திறப்பு டாக்டர்கள் பங்கேற்று பொது மக்களுக்கு அறிவுரை.

பட்டுக்கோட்டை தஞ்சை சாலையில் புதிதாக நிசா மருத்துவமனை திறப்புவிழா வியாழக்கிழமை (9/6/2022) காலை நடைபெற்றது

இந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு  தஞ்சாவூர் மனநல மருத்துவர் இக்பால் ஷரீப் எம்,பி பி,எஸ்,டி,பி,எம்.தலைமை வகித்து வரவேற்று பேசினார் பட்டுக்கோட்டை மருத்துவர் திரு,பாலகிருஸ்னன் எம்,டி. அவர்கள் மருத்துவமனையை திறந்து வைத்தனர்
பின்பு மருத்துவமனையின் மருத்துவர் இக்பால் ஷரீப் அவர்கள் அனைவரையும
 வரவேற்று பேசுகையில் கூறியதாவது:

காய்ச்சல் வந்துவிட்டால் பயம், பதற்றம் இல்லாமல் இருங்கள். நாம் உலகில் இதுவரை நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 10% தான், அது குறித்த பயத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்

தியானம், மூச்சுபயிற்சி, சிறு சிறு உடற்பயிற்சி தினமும் மேற்கொள்ளுங்கள், மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள் மகிழ்வாகவே இருங்கள். இவ்வளவு செய்தும் பயம் பதற்றம் தனியவில்லையெனில் ஒரு மனநல ஆலோசகரை சந்தியுங்கள் என கூறினார்