Hot Posts

6/recent/ticker-posts

அய்யம்பேட்டையில்தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா புதிய நிர்வாகிகள் தேர்வு! அதிராம்பட்டினம் உட்பட அனைத்து ஊர்களில் இருந்து உலமாக்கல் பங்கேற்ப்பு



அதிராம்பட்டினம் டிச.18
 தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாக தேர்தல் சனிக்கிழமை காலை அய்யம்பேட்டை அஞ்சுமன் மஹாலில் நடைப்பெற்றது. 

தமிழ்நாடு  ஜமாஅத்துல் உலமா சபையின் துணை செயலாளர் மெளலவி ஹெச்,அப்துர்ரஹ்மான் பாகவி  முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்ட தலைவராக தஞ்சாவூர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மெளலவி அல்ஹாஜ் M.ஹாஜா முஹ்யத்தீன் மிஸ்பாஹி அவர்களும் ,
மாவட்ட செயலாளராக ஆவணியாபுரம் ஜெ.எம்.கே.அரபிக்கல்லூரி துணை முதல்வர் மெளலவி அல்ஹாஜ் ஏ.ஜபருல்லாஹ் ஃபாஜில் மன்பயீ. எம்.ஏ அவர்களும்,மாவட்ட பொருளாளராக தஞ்சாவூர் ஏ.கே.எஸ்.டிரஸ்ட் பள்ளிவாசல் இமாம் மெளலவி ஷா நவாஸ் லத்தீஃபி ஃபாஜில் ஹனபி அவர்களும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு தஞ்சை மாவட்ட தேர்தல் பணிக்குழுவின் சார்பில் அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது. இத்தேர்தலில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 350 மேற்பட்ட உலமா பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் செய்த பாபநாச வட்டார ஜமாஅத்துல் உலமா சபைக்கும், அஞ்சுமன் அறக்கட்டளைகளையின் நிறுவனர் அல்ஹாஜ் ஜபருல்லாஹ் சாகிப் அவர்களுக்கும்  ஜமாத்துல் உலமா சபை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தி:
மணிச்சுடர் சாகுல் ஹமீது